Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:07:13 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
இலக்கியம்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 30
#KOTWART0230
Increase Font Size Decrease Font Size
புதன், அக்டோபர் 22, 2014
பனை மரத்து சுவாசம்!
இந்த பக்கம் 5646 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 7)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}



எண்ணில் அடங்காமல் இருந்த நாங்கள்
எளிதாய் எண்ணி விடுமளவுக்கு
எட்டாய் சுருங்கிப் போனோம்

அன்று பனங் காடாய் இருந்து
இன்று நவீன நகராகிப் போன
எங்கள் வாழ்விடங்களில்

அங்கொன்றும் இங்கொன்றும் என்றின்றி
எங்கள் இஷ்டப்படி எங்கெங்கும்
நிறைந்து நின்றோம்

எங்களை பராமரிப்போர் யாருமின்றி
நீர் பாய்ச்சும் தேவையின்றி
வானுயர வளர்ந்து வந்தோம்

எங்கிருந்து எம்மிடம் வருவாரோ தெரியாது
இந்த மொகுதூம் தெருவின்
பந்தடிக்கும் பசங்களெல்லாம்

அனு தினமும் அந்தி மணி ஐந்துக்கெல்லாம்
அரை குறையாய் ஓதிய கையோடு
அவசரமாய் ஓடோடி வந்திடுவர்

வீறு கொண்டு முட்டி மோதி விளையாட
எங்கள் தாய் மடியே இவர்களின்
கால் பந்தாட்டத் களமானது

வெற்றி தோல்வியைச் சொல்லிட
கோல் அடிக்கும் எல்லைகளாய் எங்கள்
இரட்டைப் பனைகளையே வைத்திடுவர்

ஆனாலும் மக்ரிபின் பாங்கோசை கேட்ட உடன்
படைத்தவனைத் தொழுதிடவே பந்துதரி
பறந்திடுவார் பள்ளி நோக்கி

வெள்ளியும் ஞாயிறும் வேறென்ன வேலை
காலை முதல் மாலை வரை சுட்டெரிக்கும் சூரியனும்
சுகம் தரும் சந்திரனாயிடும் இவர்களுக்கு

தந்தவர்க்கு திருப்பித் தருதல் மனிதப் பண்பு
என்றாலும் எதையும் பெறாமலே
தருவதென்பது எங்களின் ஈகைப் பண்பு

ஊரார் தம் குடிசைகளை வேந்திடவே
ஓலை சில்லாட்டை மட்டை மட்டுமின்றி
நாரோடு பனங் கட்டையும் தந்தோம்

இளம் நொங்கைத் தந்தோம் உடல் உஷ்ணம் தீர
பனங் கிழங்கைத் தந்தோம் உடல் உரம் பெற
கட்டித் தவன் தந்தோம் தண்ணீர்த் தாகம் தீர

நாம் தந்த பனங் காயால் நா இனித்தீர்கள்
இனிய பத நீரால் மனம் குளிர்ந்தீர்கள்
அத்தோடு நிறுத்தி விட வில்லை

பதநீரைக் காய்ச்சி வந்த புட்டு கருப்பட்டியுடன்
பாகு வையும் பனங் கற்கண்டையும் ருசித்தும் கூட
எம்மை விட்டு வைக்க வில்லையே

உங்கள் வதி விடங்களை கட்டியெழுப்ப
எங்கள் வமிசத்தையே வீழ்த்தி
எம் வாழிடங்களை வசப்படுத்திக் கொண்டீர்கள்

பிறர் தேவை அறிந்து தானம் வழங்கும் உங்களுக்கு
இனி நாங்கள் தேவை இல்லை என
எம் உயிரையே தானமாய் கேட்டீர்கள்

குரல் அற்ற எங்களால் உங்களை
எதிர்த்து மறுத்து முடியாதென
ஒரு வார்த்தை வெளிப் படுத்தவா முடியும் ?

எங்கள் உயிரோடு சேர்த்து
உடலையும் கூட உங்களுக்கே
தானமாய் தந்து விட்டோம்

எட்ட முடியாத உயரத்தில் நின்ற எங்களை
எட்டு அங்குல கோடரி ஒன்று
வேரோடு வெட்டிச் சாய்த்தது

பனை மரமாய் வீழ்ந்து கிடந்த எம்மைத்
துண்டு துண்டாய் கீரிப் பிளந்து
பன மரக் கட்டையாக்கி விட்டீர்கள்

வாழ்ந்தாலும் ஆயிரம் பொன்
வீழ்ந்தாலும் ஆயிரம் பொன் என்பது பழமொழி
யானை மட்டுமல்ல நாங்களும் தான்

உங்கள் புதுப் புது குடி புகுதல்களால்
எங்கள் பழம் பெரும் குடி முழுகிப் போனதே
நீங்கள் வாழ்ந்திடவே நாங்கள் வீழ்ந்து விட்டோம்

வீழந்த பின்பும் கூட உயர்ந்தே நிற்கின்றோம்
உங்கள் வீட்டைக் கட்டும் தொழிலாளியைத்
தாங்கி நிற்கும் சாரத்தின் சட்டங்கலாய்

நீங்கள் ஆசையாய் கட்டிய அந்த வீடு வரை உறவும்
காடு வரை பிள்ளையும் நின்று விட
கடைசி வரை உங்களோடு நாங்கள் மட்டுமே

உங்கள் மண்ணறை வீட்டின் முகடுகளாய்
மரணத்தை நினைவூட்டும் மீஜான் கட்டைகளாய் நின்று
மண்ணோடு மண்ணாய் மரணித்துப் போவோம்

உங்களை நாங்கள் கெஞ்சிக் கேட்பதெல்லாம்
இறுதித் தலைமுறையில் எஞ்சி நிற்கும் இந்த
எட்டையாவது விட்டு வையுங்கள் என்றே

தவறினால் உங்கள் அடுத்த தலைமுறைக்கு அறிமுகப் படுத்த
நாங்கள் ஒருவர் கூட இருக்க மாட்டோம்
அரசின் அருங் காட்சியகத்திலும் கூடவே .

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: T.A.S.Mohamed Meera Sahib (dubai) on 22 October 2014
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37858

நண்பன் புஹார்யின் இந்த கவிதை மிகவும் யதார்த்தம் ஆக உள்ளது. பனை மரமே நேரில் பேசிய உணர்வு.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. பனைப்பிலாக்கினம்
posted by: sheikh Abdul Qader (Riyadh) on 22 October 2014
IP: 5.*.*.* | Comment Reference Number: 37860

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு

'பயன் என்றபெயருக்கு பனைஎனும் உன்பெயரே வினையானது"

'மனைவாழ துணைவந்தநீ துணைகளிழந்துவருகிறாய் "

"பனையைவிதைக்க மறந்தாலும் வதைக்கமலிருப்போம்"

ஆசிரியர் எஸ் . ஐ .புஹாரி அவர்களின் இந்த பனைப்பிலாக்கினம் மிகமிகஅருமை மாஷா அல்லாஹ். எல்லாப்புகழும் இறைவனுக்கே இன்ஷா அல்லாஹ் இனியும்இதுபோன்று நல்லபடைப்புகள் தர வல்ல இறைவன் உங்களுக்கு துணைபுரிவானாக ஆமீன்.

என்றும் அன்புடன்.
இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்

இறைவன் மிகப்பெரியவன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: M. S. Shah Jahan (Colombo) on 26 October 2014
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 37888

அருமை அருமை. புதிய கவிராயரே வருக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:
posted by: nizam (desert sands of arabia) on 30 October 2014
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 37934

எனது மச்சான் புஹாரி அவர்கள் எழுதிய பனைமரங்கள் கவிதை ஆழ்ந்த கருத்து இன்றைய சூழ்நிலையில் சிந்திக்க வைகிறது. பனைமரங்கள் அழிவை எடுத்து காட்டுகிறது. சுற்றுப்புற சூலை பாதுகாப்பது அவசியம் என கூறுகிறது. கான்சரை தடுக்கும் சக்தி வாய்ந்தது பனைமரங்கள். சுனாமி தஞ்சை மாவட்டத்தை சூறையாடிய பொது பனைமரம் நிறைந்த ஊர் மட்டும் தப்பியது. அதை அன்றைய ஜனாதிபதி அப்துல் களம் அவர்கள் பார்வை இட்டார்கள். இதேபோல ஜகாங்கீர் தம்பி அவரது இணையத்தில் செல்டவர் கூறித்த கட்டுரை எழுதியதற்கு நான் ஆதரவாக கருத்து எழுதியதற்கு பொறுக்காமல் சிலர் விசிய குப்பையை கண்கொண்டு (தம்பி ஜகாங்கீர் அதை பிரசுரிக்காமல் அதை எனக்கு அனுப்பினார்கள் (என்ன பெருந்தன்மை ) மனம் வெறுத்து ஒன்னரை வருடம் கருத்து எழுதாமல் இன்றுதான் எனது மச்சானின் கவிதைக்கு பாராட்டு எழுதுகிறேன்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...பனைகள் மட்டும்
posted by: vakil. Ahamed (chennai) on 05 November 2014
IP: 14.*.*.* India | Comment Reference Number: 38021

பனைகள் மட்டும் "wifi " சிக்னல் தந்திருந்தால் அதனை வெட்டாமல் விட்டு வைத்திருப்போம். ஆளுக்கொரு பனையும் நட்டுத்தள்ளி இருப்போம்.

ஆனால் பாவம் பனையோ நொங்கு ,பனம் பழம், பனம் கிழங்கு, பதனி, கருப்பட்டி, பனம் கற்கண்டு, பணை ஓலை, குருத்து, பனங்கட்டை, மட்டை, கருக்கு, உயிர் காக்க ''அக்சிஜென்'' மட்டும் தானே தந்தது ? அதனால் தான் மனிதன் பனைகளை கொன்றானோ ? இப்படியே இயற்கை எல்லாமும் மனிதனின் சுய நலம் நிலைத்திட அழிக்கப்பட்டால் நாளை ஒரு வேளை கானல் நீர்கொண்டு அவன் தாகம் தீர்பனோ ?

புஹாரி காக்க படமெடுத்து காட்டும் அந்த எட்டு பனையில் ஒன்றையாவது வெட்டாமல் கடைசியாக விட்டுவை மனிதா, ப்ளீஸ். அது பனை மரம் இதுதான் என்று நம் வரும்கால சந்ததிக்கு அடையாளம் காட்ட அத்தாட்சியாக இருக்கட்டும். ப்ளீஸ்.

வேண்டுகோளுடன்...
வக்கில்.அஹ்மத்
நிறுவனர் & பணிப்பாளர்
துளிர் சிறப்பு குழந்தைகள் பள்ளி


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...
posted by: Abdul Azeez (Hong Kong) on 07 November 2014
IP: 218.*.*.* Hong Kong | Comment Reference Number: 38050

புஹாரி காக்கா அவர்களை ஒரு சிறந்த பேச்சாளரராக, எழுத்தாளராக மட்டுமே தெரியும். இப்போது ஒரு கவிஞராகப் பார்க்கிறேன்.

கவிதை அற்புதம். பசுமை நிறைந்த நினைவுகளை திருப்புகிறது.

அன்புடன்
அப்துல் அஜிஸ்

வாழத்துக்கள்.....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. கவிதையை பார்த்து பூரித்து போனேன். சபாஷ் !
posted by: Thangal Noohu (colombo) on 16 November 2014
IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 38171

அன்பு நண்பா, இன்னும் எத்தனை திறமையை ஒழித்து வைத்து இருக்குறீர்கள். உங்கள் இலக்கிய பயணம் தொடர எனது வாழ்த்துக்கள்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:...ஒரு உண்மையின் வெளிச்சம்
posted by: A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S.ARABIA) on 20 November 2014
IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 38193

எனது அன்பின் நண்பர் எஸ்.ஐ. புஹாரி அவர்களின் பனை மரத்து சுவாசம் என்ற இந்த கவிதை ஒரு உண்மையின் வெளிச்சம் . அவரது கவிதை வரிகள் ஓவொன்றும் அந்த பனை மரங்களின் கண்ணீர் துளிகள் . மனம் நெகிழ்த்து விட்டது .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved