Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:33:27 PM
சனி | 20 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1724, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:05Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:52
மறைவு18:27மறைவு03:40
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5405:1905:44
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
ஊடகப்பார்வை
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 3
#KOTWART043
Increase Font Size Decrease Font Size
சனி, மார்ச் 29, 2014
புஷ்பராயன் வாழ்வில் ஒரு நாள்!
இந்த பக்கம் 4030 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (3) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக ஆம் ஆத்மி கட்சியால் அறிவிக்கப்பட்ட ம.புஷ்பராயன் - தனது வேட்பு மனுவை மாவட்ட தேர்தல் அதிகாரியான மாவட்ட ஆட்சியர் எம்.ரவிகுமாரிடம் இன்று சமர்பித்தார்.



கூடங்குளம் அணு மின் உற்பத்தி திட்டத்திற்கு எதிராகப் போராடி வரும் People's Movement against Nuclear Energy (PMANE) அமைப்பின் தலைவரான உதயகுமாருக்கு அடுத்த நிலையில் பார்க்கப்பட்டு வரும் புஷ்பராயன் மீது, தேச துரோகம் உட்பட பல வழக்குகளை தமிழக அரசு போட்டிருப்பதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.

அணுமின் நிலையத்திற்கு எதிரான போராட்டத்தில் முக்கிய நபரான இவரும், உதயகுமாரும், இவ்வழக்குகள் காரணங்காட்டி காவல்துறை கைது செய்வதிலிருந்து தப்பிப்பதற்காகவே இடிந்தக்கரையை விட்டு வெகு தொலைவுக்குச் செல்வதை தவிர்த்து வந்தனர் என்றும் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

மற்றொரு நாள், மற்றொரு தருணமாக இருந்திருந்தால், காவல்துறையினரால் இவர் கைது செய்யப்பட்டிருக்கலாம். இவர் மற்றும் நூற்றுக்கணக்கானவர் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் வாங்க உச்ச நீதிமன்றம், சில மாதங்களுக்கு முன்னர் தமிழக அரசை, அறிவுறுத்தியுள்ளது. இருப்பினும் வழக்குகள் வாபஸ் வாங்கப்படவில்லை. தற்போது வேட்பு மனு தாக்கல் செய்ய அவர் இடிந்தக்கரையை விட்டு வெளியில் வந்ததே - உச்ச நீதிமன்றம், அவரைக் கைது செய்யக்கூடாது என உத்தரவிட்ட பிறகுதான் என இன்றைய தி இந்து நாளிதழ் தெரிவிக்கிறது.

சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆதரவான போராளி என மாற்று அரசியல் வட்டாரத்தில் பல ஆண்டுகளாக அறிமுகம் ஆனவர் புஷ்பராயன். DCW தொழிற்சாலைக்கு எதிரான விழிப்புணர்வு முயற்சிகள் - சில ஆண்டுகளுக்கு முன்னர் காயல்பட்டினத்தில் துவக்கப்பட்டபோது, அது தொடர்பாக காயல்பட்டினத்தில் நடத்தப்பட்ட நிகழ்ச்சியொன்றிலும் அவர் கலந்துகொண்டார்.

சிறிது காலம் சென்ற பின்னர், கூடங்குளம் அணு மின் நிலைய பிரச்சனை தீவிரம் அடைந்தது. அணுமின் நிலையத்திற்கு எதிராக போராட்டத்தில் ஈடுபடத் துவங்கிய அவரின் முழு நேரமும் அதற்காகவே கழிந்தது.

2012இல் தடைபட்டுப் போன, அவரின் சமூக ஊடக பக்கங்கள் - Facebook பக்கம், Twitter பக்கம், Blogspot பக்கங்கள்...

https://www.facebook.com/pushparayan.victoria1


https://twitter.com/pushparayan


http://pushparayan.blogspot.in/


46 வயதான புஷ்பராயனின் மனைவி ஹேமலதா. 10 வயதில் க்ரூஸ் ரியோவரன் என்ற மகன். இவரின் சொந்த ஊர் - வேம்பார். ஆங்கில இலக்கியம் பட்டதாரி. தத்துவம் பட்டதாரி. இலக்கியம் முதுநிலை பட்டதாரி.

ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு எதிராகப் போராடியவர், தாது மணல் அள்ளுவதற்கு எதிராகப் போராடியவர். சேதுசமுத்திர திட்டத்திற்கு எதிராகப் போராடியவர். சுற்றுச்சூழலுக்காகவும், மீனவர் சமுதாய நலனுக்காகவும், கடல் வள நலனுக்காகவும் 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் போராடி வருபவர்.

இது - அவரை தேர்தலில் நிறுத்தியுள்ள ஆம் ஆத்மி கட்சி இணையதளம் வழங்கும் தகவல்.

http://candidates.aamaadmiparty.org/m.-pushparayan.html


அவர் குறித்து அவ்விணையதளம் வழங்கும் மற்றொரு தகவல் இவரின் தாயார் சேவியர் சந்திரவதனம். தந்தை - மறைந்த - மஹிபன் விக்டோரியா. ஆம் - மறைந்த மஹிபன் விக்டோரியா.

டிசம்பர் 12, 2013. இது ஒரு போராளியின் வாழ்வில் ஒரு நாள். கேரளாவில் இருந்து பராமரிக்கப்படும் COUNTERCURRENTS.ORG இணையதளத்தில் வெளியிடப்பட்ட செய்தியின் தமிழாக்கம் கீழே:
http://www.countercurrents.org/anitha151213.htm

காக்கை வானில் பறந்து சென்றால் திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள இடிந்தகரை கிராமம், தூத்துக்குடியில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவுதான். ஆனால் டிசம்பர் 12 (2013) இரவு மற்றும் அதைத் தொடர்ந்த நாட்களில் – அந்தத் தொலைவு கடக்கமுடியாத தொலைவாகவே காட்சியளித்தது.

நோயால் வாடும் எந்த 85 வயது தந்தையின் மகனையும் போல - தனது தந்தை உயிரிழக்கும் போது அவர் அருகில் இருக்க விரும்பினார் புஷ்பராயன் விக்டோரியா. அந்த 100 கிலோ மீட்டர் தொலைவைக் கடக்க முடியாததால், இறுதிச் சடங்கிற்காவது அங்கு செல்ல விரும்பினார் அவர். ஆனால் அவரின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் - அது இயலாத காரியம் என விரைவில் உணர்ந்தார்கள். தமிழக அரசு - புஷ்பராயன், தனது தந்தையை இறுதியாக பார்க்கச் செல்ல முடியாத வகையில், அனைத்து தடங்கல்களையும் ஏற்படுத்தி ஆயத்தமாக இருந்தது.

ஜெயிலில் உள்ள குற்றவாளிகள் - தங்கள் நெருங்கிய உறவினர்களின் இறுதிச் சடங்கில் கலந்துகொள்ள அனுமதிக்கும் ஒரு நாட்டில், புஷ்பராயனின் அனுபவத்தை - மறக்கவோ, மன்னிக்கவோ முடியாது.

தனது இறுதி மூச்சை விடும்போது, புஷ்பராயனின் தந்தை மஹிபன் விக்டோரியா - தான் இரண்டு ஆண்டுகளாகக் காணாத தனது உறுதியான மகனை எண்ணிப் பார்த்திருப்பார்.

850 நாட்களைத் தாண்டி சென்று கொண்டிருக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிரான அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள புஷ்பராயன் மற்றும் PMANE அமைப்பிலுள்ள அவரது நெருங்கிய சகாக்களின் வாழ்க்கை - பல துயரங்களை உள்ளடக்கியது.

நினைத்துப் பார்க்க முடியாத எண்ணிக்கையில் - தேசத் துரோகம் உட்பட பல வழக்குகள் போடப்பட்டுள்ள இடிந்தகரை மீனவ கிராம மக்களின் வாழ்க்கை - மிரட்டல்களும், பொய்க் குற்றச்சாட்டுகளும் நிறைந்தவை.

சுந்தரி, சேவியர் அம்மாள் மற்றும் செல்வி ஆகியோர் திருச்சி சிறைச்சாலையில் கழித்த 6 மாதங்களை எவ்வாறு மறக்க முடியும்? அவர்களுக்கு மதுரையில் தினசரி கையெழுத்திட வேண்டும் என நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டு, தங்கள் வீடுகளுக்கு வர முடியாமல் தவித்ததை மறக்க முடியுமா?

தனது தந்தையை கிராமத்தில் பார்க்கச் சென்ற தேங்கா கணேசன் - ஜெயிலில் அடைக்கப்பட்டதைத்தான் மன்னிக்க முடியுமா?

இந்த நாட்டில் அணுமின் நிலையத்தின் அபத்தங்களைக் கேள்வி எழுப்பியதற்காக முகிலன் இழந்த நாட்களைத்தான் ஈடு செய்ய முடியுமா?

தனது வயதான பெற்றோரைப் பார்க்க முடியாமல் இருக்கும் உதயகுமாரின் தவிப்பைத்தான் கண்டு கொள்ளாமல் இருக்க முடியுமா?

புஷ்பராயனது தந்தையின் இறுதி ஊர்வலத்தில், 200க்கும் மேற்பட்ட அதிரடி காவல் துறையினரை நிறுத்தியது மூலம், இடிந்தகரை கிராமத்தை திறந்த ஜெயிலாக மாற்றிட - அரசு, தனது அதிகார பலத்தைப் பயன்படுத்தியதைக் காண முடிந்தது.

கைது செய்யப்படலாம் என்ற சூழலால், மேலும் பதட்டம் அதிகரிக்கும் என்ற காரணத்தால், தந்தையின் இறுதிச் சடங்கில் புஷ்பராயனால் கலந்துகொள்ள முடியவில்லை. அவரது நண்பர்கள் - இறுதிச் சடங்கை ஒளிப்பதிவு செய்தனர். தனது தந்தையை இறுதியாக புஷ்பராயன் - இடிந்தகரை சர்ச் பங்களாவில் உள்ள அவரது அறையில் கண்ணீர் மல்க கண்டார்.









மே 2013இல் அணுமின் நிலையத்திற்கு ஆதரவு தெரிவித்து தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அதற்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள் மீதும், PMANE அமைப்பின் தலைவர்கள் மீதும் போடப்பட்ட வழக்குகளை வாபஸ் வாங்க அறிவுறுத்தியது.

டிசம்பர் 12 நிகழ்வு - தமிழக அரசு, உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு செவிசாய்க்கவில்லை என்று தெரிவிக்கிறது. கூடங்குளம் அணுமின் நிலையத்தில் எல்லாம் சரியாக இருக்கிறது என பொய்யான ஆதாரங்களை வெளியிட்டு வரும் அரசாங்கம், மிரட்டல்களுக்கு அஞ்சாமல் - போராடிவரும் மக்களின் உறுதியைக் கண்டு திகைத்துப் போய் நிற்கிறது. ஆனால் - இதுவெல்லாம் ஒரு மகன், தனது தந்தையுடன் கழிக்க விரும்பி, கிடைக்காத அந்த சில நிமிடங்களுக்கு ஈடாகாது.

12ஆம் தேதி இரவு - புஷ்பராயன் பயணிக்க முடியாத அந்த தொலைவு, அமைதியை விரும்பும் அனைத்து மக்களுக்கும் - மிகப்பெரிய தொலைவாகும். புஷ்பராயன், அவரின் குடும்பம் மற்றும் அணுமின் நிலையங்களுக்கு எதிரான உலகெங்கும் இருக்கும் நண்பர்களின் தேற்றமுடியாத இந்த துயரம் - இந்திய ஜனநாயக வரலாற்றில் ஒரு கருப்பு பக்கம்.

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:...
posted by: P.S. ABDUL KADER (KAYALPATNAM) on 30 March 2014
IP: 117.*.*.* India | Comment Reference Number: 34039

தோழர் புஷ்பராயன் போராளி என்பதை முன்னமே உணர்ந்தேன், DCW விசியத்தில் மக்கள் நலன் கக்கா வெற்றி போராட்டம் போடா முன்வருவார?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: சாளை பஷீர் (ஜோன்ஸ் தெரு , மண்ணடி , சென்னை) on 30 March 2014
IP: 116.*.*.* India | Comment Reference Number: 34041

போராட்ட வாழ்க்கைக்காக புஷ்பராயன் கொடுத்த விலை மிகுந்த துயரம் நிறைந்தது. ஆட்சியாளர்களின் நெருக்கடியை தாண்டி வருதல் என்பது சாமானியமான விஷயம் அல்ல. கடலோடு தினம் போராடும் மீனவ சமூக மக்களுக்கு ஆளும் வர்க்கத்தின் நெருக்கடி என்பது அலையின் நுரை போலத்தான்.

பெற்ற தந்தையின் மரணத்தில் கூட பங்கெடுக்க முடியாமல் நெருக்கடி கொடுத்த ஆளும் வர்க்கமும் காவல்துறையும் இவற்றிற்கு என்றாவது ஒரு நாள் விடை சொல்லித்தான் தீர வேண்டும்.

கூடன் குளம் அணு உலையும் டி.ஸி.டபில்யூ தொழிற்சாலையின் நச்சுக்கழிவும் நிற்கும் வரை இத்தகைய போராட்டங்களும் அரசின் நெருக்கடிகளும் தனிப்பட்ட தியாகங்களும் தொடர்கதைதான் போலும்.

தோழர் புஷ்பராயன் அவர்களே ! உங்களுக்கு பின்னர் மக்களாகிய நாங்கள் இருகின்றோம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: Rilwan (TX) on 31 March 2014
IP: 108.*.*.* United States | Comment Reference Number: 34051

உண்மையில் இப்போதுதான் ஒட்டு போட ஆசையே வந்துள்ளது ,,,

மற்ற கட்சிகளுக்கு ஒட்டு போட முடிவு செய்து இருக்கும் சகோதரர்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள் .. உங்கள் ஆதரவு பெற்ற பிரதிநிதியையும் புஷ்பராயனையும் ஆராயுங்கள் .. இவர்களில் யார் சிறந்து பண்புகள் உடையவரோ அவருக்கு ஒட்டு போடுங்கள் ...

சமுதாயகட்சியின் ஆதரவு பெற்றவரின் தந்தை உங்கள் பிரதிநிதியாய் இருந்தார் ... இவரது சகோதரியும் பிரதிநிதியாய் இருந்தார் .. இந்த இருவரும் உங்களுக்கு என்ன செய்து இருக்கிறார்கள் ? இவர்கள் தேர்ந்து எடுக்கப்பட்ட பிறகு எதனை முறை இவர்களை பார்த்திருக்கிறீர்கள் ?

ஒரு முறை தவறு செய்வது மனித இயல்பு ... இரண்டாவது முறை அதே தவறை செய்வது பிழை என்று சொல்லலாம் .., ஆனால் தேர்தல் வரும்போது மட்டும் கொடுக்கப்படும் அதே வாக்குறுதிகளை நம்பி மீண்டும் மீண்டும் அதே தவறை செய்தால் என்ன சொல்வது ? நமக்கு ஆறறிவு இருக்கிறதே ? நாம் ஒன்றும் ஆட்டு மந்தைகள் இல்லை என்பத நினைவில் கொள்ளுங்கள் .


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersFaams
AKM JewellersCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved