Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
10:31:23 PM
வெள்ளி | 19 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1723, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5412:2415:2818:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:06Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்15:09
மறைவு18:27மறைவு03:03
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5505:2005:45
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:38
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 103
#KOTWART01103
Increase Font Size Decrease Font Size
புதன், மார்ச் 23, 2016
“CORRUPTION – COMMISSION – COLLECTION”
இந்த பக்கம் 2186 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (5) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 1)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

“CORRUPTION – COMMISSION – COLLECTION” இவைதான் இன்று பொதுவாழ்வில் செயல்படுவதாக கூறிக்கொண்டு வயிற்றை நிரப்பும் சிலரின் தார மந்திரம். இச்செயலை திருக்குர்ஆன் (2:188), ஹதீஸ் வன்மையாகக் கண்டிக்கிறது.

“அன்றியும் உங்களுக்கிடையில் ஒருவர் மற்றவரின் பொருளைத் தவறான முறையில் சாப்பிடாதீர்கள். மேலும் நீங்கள் அறிந்து கொண்டே மக்களின் பொருள்களிலிருந்து ஒரு பகுதியை அநியாயமாகத் திண்பதற்காக அதிகாரிகளிடம் (லஞ்சம்கொடுக்க) நெருங்காதீர்கள்”

லஞ்சம் வாங்குபவரையும் லஞ்சம் கொடுப்பவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள் என அப்துல்லாஹ் இப்னு உமர் (ரழி) அறிவித்துள்ளார்கள். திர்மிதி 1257, அபுதாவூத் 3109, இப்னுமாஜா 2304.

முந்தைய காலங்களில் பஞ்சாயத்து போர்டு, பள்ளிவாசல்கள், பள்ளிக்கூடம் பராமரிப்புக்கு ஆட்களைத் தேர்வு செய்யும் பொழுது தப்புத் தவறுகள் ஏதும் தன்னாலோ, பிறராலோ ஏற்பட்டால் அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று பயந்து பலர் முன்வர மாட்டார்கள். மக்களின் வற்புறுத்தலின் பேரில் பதவி ஏற்றவர்கள் தனது உடலில் ஹராமான உணவு சேர்ந்து விடக்கூடாது என்று பயந்து பணியாற்றுவார்கள். நீதி, நியாயமாக ஏழை, பணக்காரன் என்று பார்க்காமல் கடமை புரிவார்கள்.

இதனால் லஞ்சம், கொள்ளை, ஏமாற்று வேலை நடைபெறவில்லை. ஊர் நன்மைக்காக சொத்துக்களை அல்லாஹ்வின் திருப்பொருத்தத்தை வேண்டி தாராளமாக தானமாக வழங்கினார்கள். அதன் நன்மையை அவர்கள் வாழையடி வாழையாக அனுபவிக்கிறார்கள்.

ஆனால் இன்று பஞ்சாயத்து போர்டுக்கு உறுப்பினராக நிற்க துடிப்பவர்களில் ஒரு சாரார் அங்கு என்ன பணி செய்ய வேண்டும் என்பதை அறிய மாட்டார்கள். மாறாக அங்கு என்ன கிடைக்கும் என்பதை அறிந்து வைத்துள்ளார்கள்.



“காலுக்கு செருப்பாகுவேன்! கூப்பிட்ட குரலுக்கு ஓடி வருவேன்!! அல்லாஹ்வின் மீது சத்தியமாக லஞ்சம் வாங்க மாட்டேன்!!!” என்பார்கள். பள்ளிவாசலில் 5 வேளை என்ன, 50 வேளை தொழுவார்கள், வெற்றி பெற்ற பின் அல்லாஹ்வையும் வாக்களித்தவர்களையும் மறந்து விடுவார்கள்.

ஒரு பகுதி வாக்காளர்களோ அவனுடைய திறமையை, கல்வியை, நன்னடத்தையை, சேவையை பார்க்க மாட்டார்கள். குடும்பம், மதம், கட்சி, பணம், குவாட்டர்தான் அவனை தேர்வு செய்கிறது. இத்தகையோரைத் தேர்வுசெய்து தனது கட்டுப்பாட்டிற்குள் வைத்துக்கொண்டு தனது காரியத்தை நடத்தும் முதலாளிகள் பல லட்சங்களைப் பறக்க விடுகிறார்கள்.

கட்சி வேஷ்டி உடுத்திக்கொண்டு காண்ட்ராக்ட்காரர்களை பயமுறுத்தி கமிஷன் அடிக்கிறார்கள். சுமார் 55 சதவிகிதம் வரை அதிகாரிகள், அரசியல்வாதிகள், உறுப்பினர்களுக்கு கமிஷன் கொடுக்க வேண்டியிருப்பதால் ஆற்று மணலோடு அஸ்திவாரத்துக்கு தோண்டப்படும் மணலையும் சேர்த்து கட்டிடம் கட்டுகிறார்கள். கட்டிடம் 5 வருடங்களுக்குள் ஆடி விடுகிறது.

தவறைச் சுட்டிக்காட்டினால் பயமுறுத்துகிறார்கள். “இங்கு என்ன கலீஃபா. உமர் (ரலி) அவர்களின் ஆட்சியா நடக்கிறது?” என்று லஞ்சத்திற்கு லாவண்யம் பாடுபவர்கள் பலர் உண்டு.

வீடு கட்டாமலே பிளேனைக் காட்டி தீர்வை வழங்குதல், இறந்தவரின் பெயரில் உள்ள நிலத்தில் வணக்கஸ்தலம் என்று கூட பார்க்காமல் பிளேன் அப்ரூவல் செய்தல், ஒருவரின் பெயரில் நீண்டகாலமாக தீர்வை செலுத்தி வரும் வழிபாட்டுத்தலத்திற்கு அடுத்தவரின் பெயரில் தீர்வை மாற்றம் செய்தல், பொதுப்பாதையை ஆக்கிரமிப்பு செய்து காம்பவுண்ட் சுவர் கட்ட அனுமதி வழங்குதல், ஏழைகளில் வீடுகளை ஒரு இன்ச் விடாமல் அளந்து தீர்வையிடும் நிர்வாகம் பணக்காரர்களின் வீடுகளை மட்டும் பார்வையிடாமலேயே குறைந்த தீர்வை போடுதல் போன்ற தவறான காரியங்கள் லஞ்சத்தின் மூலம் அரங்கேறுகிறது.

பள்ளிக்கூடத்தில் மாணவர்களை சேர்க்க ஆயிரக்கணக்கில் லஞ்சம். சிறுபான்மையினர் நடத்தும் சில கல்விக்கூடங்களில் சிறுபான்மையினருக்கு ஆசிரியர் அப்பாயின்ட்மென்ட் கொடுத்தால் லஞ்சம் கேட்பது. வெளியில் தெரிந்துவிடும் என்பதால் மாற்று சமூகத்தினருக்கு வேலை கொடுக்கிறார்கள்.

பள்ளி கட்டுமான வேலைகள், கட்டுமான பொருட்கள் தரமற்றதாக இருந்தாலும் பரவாயில்லை, தான் குறிப்பிடும் நபருக்கே கொடுக்க வேண்டும் என்று பொறுப்பில் இருப்பவர்களில் சிலர் கூறுகிறார்கள் இதனால் கல்விக்கூடம் தரமற்றதாகவும், கல்வித் தரம் குறைந்தும் காணப்படுகிறது. சில இடங்களின் பள்ளிக்கூடம் இடிந்து மாணவர்கள் உயிரிழந்த சம்பவங்கள் உண்டு.

வக்ஃபு வாரியத்துக்கு உட்பட்ட பள்ளிவாசல்களில் கட்டுமான வேலைகள், கடைகளை வாடகைக்கு விடுதல், வரவு செலவு கணக்குகள் அனைத்தும் வக்ஃபு வாரியத்தின் அனுமதியுடன் நடக்க வேண்டும் என்பது விதி.

சில வட்டி மூஸாக்களும், தொழுகையே இல்லாதவர்களும், ஹராமாக அடுத்தவர் சொத்தை ஆட்டை போடுபவர்களும் பள்ளி நிர்வாகத்தில் பங்கு வகிக்கிறார்கள்.. கஞ்சி போடுவதில் கடைக்காரர்களிடம் கையூட்டுகள், உள்ஹிய்யா மாடு வாங்குவதில் உள்ளடி, மய்யித் அடக்க வாங்கும் சாமன்களிலும் கமிஷன், கந்தூரி, கல்யாண நிகழ்ச்சிகளில் முன்டியடித்துக் கொண்டு சிலர் சில்லரைக்காக அலைவது அன்றாட நிகழ்ச்சிகள்.

பள்ளி கட்டுமானங்களை டென்டர் விட்டு கட்ட வேண்டும். முஸ்லிம் மேஸ்திரிகளுக்கு கொடுத்தால் கமிஷன் வாங்க முடியாது என்பதால் டென்டர் விடாமல் மாற்று மதத்தினருக்கு கொடுத்து கமிஷனைக் கரந்து விடுகிறார்கள். இதனால் நமது சமுதாயம் வேலையில்லாமல் ரோட்டை அளக்கிறது.

ராமன் ஆண்டால் என்ன? ராவணன் ஆண்டா என்ன??

என்றிருந்தால் ஊர் லஞ்சத்திலும், கமி‘னிலும், கொள்ளையிலும் ஊறிப்போகும். பொதுமக்கள் வரிப்பணம் வீணாகும். அத்தியாவசியமான தேவைகள் நடைபெறாது. லஞ்சமில்லாமல், கமிஷன் இல்லாமல் 60 வருடத்திற்கு முன்பு கட்டப்பட்ட நமதூர் பஸ் ஸ்டான்ட் வாட்டர் டேங்கைப் பாருங்கள்! மற்ற வாட்டர் டேங்களையும் பாருங்கள் - உண்மை புரியும்!!

அல்லாஹ்வுக்கு பதில் சொல்ல வேண்டிய பொதுமக்களே! விழிப்புடன் இருந்து, பஞ்சாயத்து போர்டு, பள்ளிக்கூடம், பள்ளிவாசல்கள் மற்ற இதர இடங்களில் ஹராமான வழியில் வயிற்றை வளர்க்கத் துடிப்பவர்களை ஒதுக்குங்கள்! நல்லவர்களிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்!!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. coma coma coma
posted by: Sheikh Abdul Qader (Riyadh) on 23 March 2016
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43393

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு.

இறையருள் நிறைக.

ஆசிரியரின் கூற்றுகளில் புதிதாக எந்தா ஒரு ஆச்சரியங்களும் நிகழப்போவதில்லை மாச்சரியங்கள் நிகழலாம். காரணம் மக்கள் கோமாவிலிருக்கிறார்கள்.

நீங்கள் 3சி களை தலைப்பாகத் தந்திருக்கிறீர்கள் ஆனால் அரசியல்வாதிகள் எத்தனை சி களை இரைக்கவிருக்கிறார்கள் மக்களும் அவர்களின் ஈக்களாகத்தானே இருக்கிறார்கள் இலவசங்களின் வசம்தானே இருக்கிறார்கள் எதிர்க்கமுடியாத புழுக்களாக இருக்கும்வரை நம் மனப் புழுக்கங்களுக்கு எப்படி விடிவு வரும்?

கலீபாக்களோடு கலீஜ்களை ஒப்பிட முடியுமா?

சாக்கடையாக சூழ்ந்துவிட்ட நீர்ப்பரப்பில் தெளிந்த இடம் பார்த்து கடக்க வேண்டியதுதான் எனும் நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம்.

ஆசிரியர் தனது ஆதங்களை ஒரே மூச்சில் சாட்டையடியாக எரிமலையாகக் கொட்டியிருக்கிறார்கள் மக்களென்ற பெயரில் மாக்களாக இருக்கும் இந்த ஜென்மங்கள் சூட்டை உணர்ந்து கொதித்தெழுகிறார்களா இல்லை இன்னும் குனிந்துதொழுகிறார்களா பார்ப்போம் மக்களென்றால் நாம்தானே.

அல்லாஹ் நமக்கு துணிவையும் சுயமரியாதையையும் தரட்டும் ஒவ்வொருதேர்தலுக்குப்பிறகும் மக்களும் வாக்குகளும் மறந்துபோகின்றன காரணம் நாம்துணிந்து போராடுவதில்லை,கேள்விகள் எழுப்புவதில்லை மாறாக பயந்தும்,பணிந்தும்,குனிந்தும்போகிறோம்.

நாம் புலியாகப்பாயவேண்டாம்,சிங்கமாக கர்ஜிக்கவேண்டாம் நம் உரிமைகளுக்காக நாம்கட்டும் நமதுவரிப்பணங்களுக்கு நல்லமரியாதைகிடைப்பதற்காக குறைந்தபட்சம் ஒரு குளவியாகவாவது மாறுவோம் இன்ஷா அல்லாஹ் அப்பொழுதுதான் நியாயத்திற்குவிடிவுகிடைக்கும்.

சரியான காலத்தில் பதிவிடப்பட்ட சமூகனலன் கருதும் குமுறல் இன்னும்கொஞ்சம் எளியநடையில் யதார்த்த நடையில் மேற்கோல்கள் தந்து விளங்கும் விதத்தில் தாருங்கள்.

வாழ்த்துக்கள் ஆசிரியர் அவர்களே நிறைய நிறைய நல்லநல்ல படைப்புகளோடு களமிறங்குங்கள் வெற்றிவாகை சூடுங்கள் வல்லஇறைவன் அதற்கான ஆற்றலையும் நலவளங்களையும் உங்களுக்குப்பொழிந்தருள்வானாக ஆமீன்.

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: KJ KALIFA SEYED MOHAMED (Chennai) on 24 March 2016
IP: 122.*.*.* India | Comment Reference Number: 43397

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்..)

இன்றைய நாட்டு(உலக) நடப்பை கண்முன்னே கொண்டு வந்திருக்கிறது இவ்வாக்கம். மாஷா அல்லாஹ்!

5 வேளை என்ன, 50 வேளை தொழுவார்கள். c&p வழிபாட்டு எண்ணிக்கையில் மிகைப்படுத்தும் வாசகத்தை தவிர்த்திருக்கலாமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. Re:...
posted by: Raiz (Sydney) on 24 March 2016
IP: 203.*.*.* Australia | Comment Reference Number: 43400

Assalamu alaikum

Very well said ! I am pretty sure that people would read it like any other article and pass on without realizing the author has written about YOU and ME!

He is not talking about anyone else, but YOU and ME! We are all contributing to this corruption either directly or indirectly!

Islam is not only about prayers, but also about living a honest , pure and straight forward personal and SOCIAL life! Unless we realize that, this article will not make any change!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:..corruption-commission-கோல்லேச்டின்.
posted by: சாளை:M.A.K.முஹம்மத்இப்ராஹீம்ஸுஃபி. (கோழிக்கோடு - கேரளா .) on 24 March 2016
IP: 106.*.*.* India | Comment Reference Number: 43401

CORRUPTION-COMMISON-COLLECTION.

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்..... ஹு.

நம் நாட்டில் உள்ளாட்சி ஊழியர்களிலிருந்து பெரு அரசியல்வாதிகள்வரை நூறிலிருந்து நூறாயிரம் கோடிகளையும் தாண்டி லஞ்ச ,ஊழல்கள் செய்து சிக்கினாலும் மீண்டும் மீண்டும் அவர்கள் ஆட்சிக்கு வருவதைப் பார்கும்போது இந்த கட்டுரைக்கு கருத்து தெரிவித்துள்ள சகோதரர் SHEIKH ABDUL QADER (RIYADH) அவர்களின் மக்கள் கோமாவில் உள்ளனர் என்ற கூற்று 100% உண்மையானதே.

அரசியல்வாதிகளிடமிருந்து நாம் நம் இரு கரங்களையும் தாழ்த்தி வாங்கும் இலவசங்களும் ஒரு வகையில் இலஞ்சமே. இந்த இலவசங்களை (இலஞ்சங்களை) வாங்கிக்கொண்டு் என் தவறுகளை கண்டுக்கொள்ளாமல் மீண்டும் என்னை தேர்ந்தெடு என்பதுதான் இந்த இலவசங்களில் பொதிந்திருக்கும் தத்துவம். ஆக முதற்கட்டமாக மக்களாகிய நாம் இந்த இலவசம் என்ற பெயரில் நாம் வாங்கும் இந்த இலஞ்சத்தை வாங்காமல் ஒழிப்ப்போம்.

இலஞ்சத்தை ஒழிக்க வேண்டும் என்ற சமூக அக்கறையுள்ள ஆதங்கங்கள் இந்த ஆக்கத்தில் மிகுதியாக உள்ளதுபோல் அதிகாரிகளிடம் இலஞ்சம் கொடுக்காமல் முறையான காலவரைக்குள் , அலைகழிக்கப்படாமலும் நம்தேவைகளை எவ்வாறெல்லாம் பெற வழிவகை உள்ளதென்று கூடுதலாக கூறியிருந்தால் எம்போன்றவர்களுக்கு இன்னும் பிரயோஜனமாக இருந்திருக்கும்.

கட்டுரையாளர் இந்த கட்டுரையின் இறுதியில் "நல்லவர்களிடம் பொருப்புக்களை ஒப்படையுங்கள்" என்று வைக்கும் முற்றுபுள்ளி இந்த ஆக்கத்திற்கு சிறந்ததொரு வைரமகுடம்.

உள்ளாட்சிப் பொறுப்புக்களிலிருந்து இன்ன பிற பொறுப்புக்கள் வரை நல்லவர்களிடம் பொறுப்பை ஒப்படைக்க வேண்டிய நாம் அனைவருமே நாம்சார்ந்த வட்டார ஜமாஅத்தின் அங்கத்தினர்களாேவாம். ஒவ்வொரு ஜமாஅத்தினரும் தத்தமது ஜமாஅத்தினரில் உள்ள தகுதியானவர்களை தகுதியான பொறுப்புகளுக்கு ஏகமனதாக தேர்ந்தெடுத்து அனுப்புவதும் ஒரளவு "C C C" ன் கொடூர பிடியிலிந்து நம்மை நாம் தற்காத்து கொள்ள முடியும். இன்ஷா அல்லாஹ்.

இவ்வாக்கத்தின் சகோதருக்கும், இதனை வெளியிட்டுள்ள இவ்விணையதள சகோதரர்களுக்கும் ... ஜஃஸாக அல்லாஹு க்ஹைரா.

சாளை:M.A.K.முஹம்மத் இப்ராஹீம் ஸுஃபி.
கோழிக்கோடு - கேரளா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. Re:...
posted by: HASAN (Qatar) on 25 March 2016
IP: 89.*.*.* Qatar | Comment Reference Number: 43405

அல்லாஹ்வுக்கு அனைவரும் பதில் சொல்லி ஆகியே வேண்டும்...

பொதுமக்களாகிய நாம் அனைவரும், விழிப்புடன் இருந்து, பஞ்சாயத்து போர்டு, பள்ளிக்கூடம், பள்ளிவாசல்கள் மற்ற இதர பொது இடங்களில் ஹராமான வழியில் வயிற்றை வளர்க்கத் துடிப்பவர்களை ஒதுக்குங்கள்! நல்லவர்களிடம் பொறுப்பை ஒப்படையுங்கள்!!

அல்லாஹ் நம் அனைவரையும் இறுதி வரை நேர் வழியில் செலுத்துவானாக!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved