Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
4:19:37 PM
செவ்வாய் | 23 ஏப்ரல் 2024 | துல்ஹஜ் 1727, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5212:2315:3018:3319:43
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:04Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்18:01
மறைவு18:27மறைவு05:27
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5205:1805:43
உச்சி
12:16
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4819:1319:39
Go to Homepage
சிறப்புக் கட்டுரைகள்
ஆக்கங்கள் அனைத்தும் காண | அனைத்து கருத்துக்களையும் காண
Previous ArticleNext Article
ஆக்கம் எண் (ID #) 102
#KOTWART01102
Increase Font Size Decrease Font Size
வியாழன், மார்ச் 3, 2016
எதிரே ஒரு எச்சரிக்கை!
இந்த பக்கம் 3639 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (8) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

தினசரி காலை 6 மணி...

என் தற்காலிக வீட்டு சன்னலை திறக்கும்போதெல்லாம் - இனி குடிபெயர இருக்கும் வீட்டின் எண்ணமும் சேர்ந்தே மனதில் திறந்து விடும். நமக்கு முன்னே நம்மிடம் விடைபெற்றுச் சென்ற நமது சகோதர சகோதரிகளின் இல்லங்கள் (மையவாடி) தான் என் வீட்டின் எதிரே இருப்பது!

சில நிமிடங்கள் அங்கு பார்த்தவாறே நம் முஸ்லிமான, முஃமினான நம் சகோதர சகோதரிகளுக்காகவும், குறிப்பாக என் அன்புத் தந்தைக்காகவும் (இலங்கை புத்தளத்தில் அடங்கியுள்ளார்கள்), நம் நபி கற்றுத் தந்த துஆவை இறைஞ்சுவதோடு - நாளை நமக்கும் ஒரு நாள் இதே நிலைதானே என்ற உறுத்தலான உணர்வோடு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்புவேன்.

அன்று நம்மோடு பாசத்தோடும், பரிவோடும் பழகியோர் பலர் இன்று நம் எதிரே அங்கு வீற்றிருப்பதை நோக்கும்போது - மனம் சற்று சஞ்சலம் அடைந்தாலும், நாளை ஒரு நாள் நம் நிலையும் இதுபோல்தான்; இறைவனின் நியதியும் இதுதானே என்ற எண்ணம் எனக்குள்ளே பதில் தந்துவிடும்.

சில நேரம் “ஜனாஸா” இப்பள்ளியில் அடக்கப்படுகிறது என்ற செய்தியறிந்தால், அந்த ஜனாஸாவிற்காகத் தோண்டப்படும் குழி முதல் அதற்காக நடக்கும் வேலைகள் மற்றும் ஜனாஸா அடக்கப்பட்டு மௌலவியின் உருக்கமான உரை நிறைவுற்ற பின் சொந்தங்களும், பந்தங்களும் திரும்பிச் செல்லும் காட்சியான கண்களில் நீர் தழும்ப பார்க்கும்போது.....

ஓ மனமே! நாளை ஒரு நாள் உன் நிலையும் இதுதான்! நீதான் இந்த ஜனாஸாவாக நினைத்துக் கொள்! இதோ இவர்கள் உன் சொந்தங்கள்! உன்னோடு துணையாக அங்கு வரும் நல் அமல்களைச் செய்து கொள்! உனக்குக் கொடுத்த அவகாசத்தை பயன்படுத்திக் கொள்! என்ற உள்ளத்தை தட்டியெழுப்பும் ஓர் மரண எச்சரிக்கை மனதில் உதிக்க.....

ஓ! நாம் இதுவரை என்ன செய்திருக்கிறோம் என்று எண்ண நினைத்தபோது பதில் சொல்ல உள்ளம் மறுத்து, விழி பிதுங்கி நின்றபோது “ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நீங்கள் உறுதியாக கெட்டப்பட்ட கோட்டைக்குள் இருந்தாலும் சரியே! என்ற இறைமறை அத்தியாயம் இன்னும் என்னை எச்சரித்தது.

இங்கோ, மாடி வீட்டை அலங்கரித்துக் கொண்டிருக்கும் நாம் - கப்ருடைய வீட்டையும், நாளை மறுமையிலே நிரந்தரமாக இருக்க வேண்டுமே என ஆசையூட்டும் சுவர்க்கத்து வீட்டையும் எவ்வாறு அலங்கரிப்பது என்ற வினாவிற்கு விடையளித்தது இறைமறை வசனங்கள் பல.

எந்தக் கண்ணும் பார்த்திராத, எந்தக் காதும் கேட்டிராதபடி இருக்கும் சுவர்க்கச் சோலையைப் பற்றிய இறை தூதரின் கூற்றும் இதயத்தில் அசைபோட, நடுநடுங்க வைக்கும் நரகத்தின் வேதனைகளும் நெஞ்சத்தை நெருட வைத்தவாறு - வீடு, குடும்பம், குழந்தைகள், வேலை என இயல்பு வாழ்க்கை தொடர்ந்துவிடும்.

மீண்டும் மாலை 6 மணி...

கொசுத் தொல்லைக்காக சன்னலை மூடும்போது, இன்று கொசுத் தொல்லைக்காக சன்னலை மூடும் - நீ நாளை அங்கு ஏற்படும் விச ஜந்துக்களின் தொல்லைகளை நினைத்தாயா? என யாரோ எச்சரிப்பது போல இருக்க “இறந்து போனவர்களை அல்லாஹ் எழுப்பியே தீருவான், பிறகு அவர்கள் அவனிடமே கொண்டு வரப்படுவார்கள்” என்ற இறை வசனமும் இதயத்தில் அசை போட்டவாறு இரவை அடைந்து மீண்டும் பகலை நோக்கி என படிப்படியாக மெல்ல உருகிக் கொண்டிருக்கும் பணிகட்டி போல் நம் வாழ்க்கை பயணத்தின் எண்ணிக்கையும் கரைத்துக் கொண்டிருப்பதே ஓர் நிதர்சன உண்மை.

மறுமையை நோக்கிப் பயணிக்கும் நாம் இறைவனின் கருணையைப் பெற்று இருலோக வெற்றியைப் பெற இறைவனிடம் இறைஞ்சுவோமாக!

என் நெஞ்சம் என்னும் மஞ்சத்தில் நினைவுகளாய் அசைபோடும் இன்னும் பிற எண்ணங்களை இனி தொடரும் ஆசையுடன் (இன்ஷா அல்லாஹ்) முடிவடையும் இக்கட்டுரை!

Previous ArticleNext Article
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஆயினும் வாழ்த்துக்கள் .......
posted by: musthak ahamed (kuwait) on 03 March 2016
IP: 31.*.*.* Kuwait | Comment Reference Number: 43300

ஒரு பயத்துடன் தான் கட்டுரையை வாசிக்க ஆரம்பிக்கின்றோம்....

ஆனால் கட்டுரை தொடக்கத்திலேயே முடிந்துவிடுவதுதான் ஏமாற்றம்.

எடுத்துக்கொண்ட விஷயம் எந்த காலத்திற்கும் பொருத்தமானது. நிறைய ஆதார சம்பவங்களும், சரித்திரங்களும் நம் முன்னே விரிந்து கிடக்கின்றது.

கட்டுரை தலைப்பிற்கு ஏற்றவாறு இன்னும் கொஞ்சம் அழுத்தம் கொடுத்து இருப்பின் வாசகர்களை கதற அடித்து இருக்கலாம்.. கட்டுரை முழுமை அடைந்திருக்கும்.

ஆயினும் வாழ்த்துக்கள் .....

அழகான எழுத்து நடை வாய்த்திருக்கிறது... . தொடரட்டும் உங்கள் எழுத்துப் பணி...... இன்னும் ஆழமாய்... இன்னும் அதிரடியாய்....

முஸ்தாக் அஹ்மத்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
2. Re:...
posted by: kamalmusthafa (abha.ksa) on 04 March 2016
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43302

எதிரே ஒரு எச்சரிக்கை அருமை யான தலைப்பு ஆழமான சிந்தனை

இஸ்லாம் ஒரு புனிதமான மார்க்கம் அதை ஏற்று கொண்ட ஒவ் ஒரு முமீன் களின் மனதிலும் இந்த என்னம்நிரந்தரமாக இருக்கவேண்டும்

உலக ஆசைக்காக வாழும் நாம் மறுமையை பற்றி நினைப்பது இல்லை ஏன் என்றால் அது கண்னுக்குதெரிவதில்லை நம் உள்ளம் அதை உணர்த்தினாலும் சிந்தனை அதை ஏற்ப்பதில்லை ஏன் என்றால் அல்லாஹ் அனைத்தையும் மன்நிக்க கூடியவனக இருக்கிறான்

சகோதரி ஆயிஷா கூரியதுபொல் பனிக்கட்டி போல் உருகும் நம் வாழ்க்கை யை உனர்ந்துஅனைத்து மூமின்கலும் நம் நபிகள் நாயகம் (ஸல் ஹ்)அவர்கள் காட்டிய வழி முறைகளை பின்பற்றி இம்மையிலும் மறுமையிலும் நாம் சந்தோசமாக வாழ அல்லாஹ் நம் அனைவருக்கும் கிருபை செய்வானாக ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
3. சுருக்கமான,சுருக்கென்ற கட்டுரை.
posted by: SHEIKHA ABDUL QADER (RIYADH) on 04 March 2016
IP: 5.*.*.* | Comment Reference Number: 43307

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹி வபரக்காத்துஹு. இறையருள் நிறைக.

ஜன்னலுக்குள்ளும் வெளியிலும் ஆராயப்பட்ட நிகழவிருக்கும் நிதர்சன உண்மைகளின்பதிவு. வெளிச்சத்திலுருப்பதாக எண்ணும் நாம் உண்மையில் இருப்பது இருட்டென்பதை மறந்துவிட்டிருக்கிறோம் என்பதை வெளிச்சம்போட்டு நினைவூட்டியிருகிறது கட்டுரை.

மனக்கோட்டைகளைத்தகர்க்கும் மண்ணறைப்பிரவேசம் எதிரில் ஆவலோடு உள்ளதென்பதும் அங்கேதான் வெளிச்சம்வேண்டுமென்றும் அதற்கு நம் மின்கலங்களை சேர்விகளால் (charge) நல்லமல்களால் நிறைக்கவேண்டுமென்று நினைவூட்டியிருக்கிறார் ஆசிரியையவர்கள் மாஷா அல்லாஹ் வாழ்த்துக்கள் தொடரட்டும் எச்சரிக்கைமணிகளோடு வாழ்க்கையின் நற்சேதிகளும் அதற்கான ஆற்றலும் நலவளமும் வல்லஇறைவன் தரப்போதுமானவன் இன்ஷா அல்லாஹ் அல்லாஹும்ம ஆமீன்

சிறியகட்டுரையானாலும் சிறப்பானகட்டுரை வாழ்க்கையும் அவ்வளவுதானே போதும்.

இதைப்படித்துமுடிக்குமுன்னே எத்தனைபேரின் வாழ்க்கைமுடிந்துவிடுகிறதோ அந்த நாயனேஅறிவான் அவனுக்கே எல்லாப்புகழும்.

வல்லநாயன் நம்மனைவரையும் நேர்வழியில்சென்று நல்லமலின்பால் மனங்களைத்திருப்பி மறுமைக்குசெல்வம்சேர்க்க நல்லருள்பிரிவானாக ஆமீன் அனைவரும் துஆச்செய்வோம் இன்ஷா அல்லாஹ் அல்லாஹும்ம ஆமீன்.

""சுருக்கமான,சுருக்கென்ற கட்டுரை.""

இறைவன் மிகப்பெரியவன்.

இறையடிமை,
ஷேக் அப்துல் காதிர்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
4. Re:...
posted by: nmshamu...dsp (dammam) on 06 March 2016
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43313

மறுமையை நோக்கிப் பயணிக்கும் நாம் இறைவனின் கருணையைப் பெற்று இருலோக வெற்றியைப் பெற இறைவனிடம் இறைஞ்சுவோமாக!

.........என்ன ஆழமான கருத்து கண்களில் கண்ணீர் முட்டுஹிறது ..இறைவா எங்கள் பிழைகளை மன்னிப்பயஹா யா ரஹ்மானே .......ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
5. நல் வாழ்த்துக்கள்...!
posted by: M.N.L.முஹம்மது ரபீக் (சிங்கப்பூர்) on 09 March 2016
IP: 119.*.*.* Singapore | Comment Reference Number: 43333

எனதருமை மருமகளுக்கு முதலில் நல் வாழ்த்துக்கள்...!

இணையதளத்தில் இதுதான் உனது முதல் கட்டுரை என நினைக்கின்றேன். அர்த்தச் செறிவுள்ள ஓர் விஷயத்தை கட்டுரையின் கருவாகத் தேர்வு செய்து அழுத்தமாகச் சொல்லியிருக்கின்றாய்! மக்கி மாமா சொன்னதுபோல் ன்னும் கொஞ்சம் கட்டுரையை நீட்டித்திருக்கலாம்.

எனது மைத்துனர் அதாவது உனது பாசத்திற்குரிய தந்தை மர்ஹும் மிஸ்பாஹி ஆலிம் அவர்களின் இல்மு அசாத்தியமான ஒன்று.

எழுத்தாற்றல், சொல்லாற்றல், மார்க்க ஞானம், ஆங்கில புலமை இப்படி அனைத்து துறைகளிலும் அவர்கள் மிளிர்ந்தை நான் அறிவேன். புலிக்குப் பிறந்தது பூனையாகாது என்பதை உன் எழுத்தால் நிரூபித்து விட்டாய்! இன்னும் நிறைய எழுத வேண்டும். சமூக நன்மை, சமுதாய மேம்பாடு, அனுபவ பாடம் இப்படி அலசி ஆராயந்து அதற்கு எழுத்துருவம் நல்கி சிறந்த எழுத்தாளராக வேண்டும். சிறப்பு கட்டுரைகளோடு நிறுத்திவிடாமல் எழுத்து மேடையிலும் உனது ஆக்கங்கள் இடம்பெற வேண்டும். இன்ஷா அல்லாஹ்....

அன்புடன்,
-ஹிஜாஸ் மைந்தன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
6. Re:...அருமையான ஒரு ஆக்கம் ...
posted by: A.S.L.SULAIMAN LEBBAI (RIYADH - S . ARABIA) on 09 March 2016
IP: 78.*.*.* Romania | Comment Reference Number: 43337

சகோதிரியின் " இந்த எதிரே ஒரு எச்சரிக்கை" ஆக்கம் அருமையானது .

நம் அனைவர்களும் நமது வாழ்வில் மரணம் ஒரு நாள் நமக்கு நிச்சயம் வரும் என்று நினைத்து .. நாம் இந்த உலக வாழ்விற்காக எப்படி எல்லாம் கஷ்டப்பட்டு பணத்தையும் , சொத்துகளையும் தினமும் சேமிக்க முயற்சிகளை எடுகிறோமோ ... அதை போல நமது மறுமை வாழ்விற்காக இது வரை நாம் எதை சேமித்து வைத்து உள்ளோம் . நாளை அல்லாஹ்விடம் நாம் என்ன பதிலை நாம் சொல்ல உள்ளோம் ..என்று நம்மை நாமே நமது மன சாட்சியை கேட்டு கொள்ள வேண்டும் ..அப்படி நாம் தினமும் கேட்டு கொண்டால் .. அதுவே நல்ல வழியில் நாம் நடக்க உதவியாக இருக்கும் ..

நாளை என்பது நமக்கு நிச்சயமற்ற ஓன்று .. நேற்று வரை நாம் நல்ல அமல்களை செய்ய தவறி இருந்தால் ... இன்ஷா அல்லாஹு இன்று முதல் நல்ல அமல்களை செய்வோம் .. அல்லாஹ்விடம் நாம் நேற்று வரை செய்த பாவங்களுக்கு மன்னிப்பு கேட்போம் ... அல்லாஹு நம் எல்லோர்களையும் நல்ல அமல்களை செய்து அவனது உகப்பான , பொருத்தம் நிறைந்த அவனது நல்ல அடியார்கள் கூட்டத்தில் இணைய அருள் புரிவானக . ஆமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
7. தவ்ஹீத், ரிஸாலா, ஆகிரத்...
posted by: கத்தீபு முஹம்மது முஹ்யித்தீன் (தோஹா – கத்தார்) on 12 March 2016
IP: 178.*.*.* Qatar | Comment Reference Number: 43346

நம் வீட்டின் ஜன்னல் சாளரங்களைக் காலையில் திறக்கிறோம்; மாலையில் மூடுகிறோம் என்பது ஓர் அன்றாட நிகழ்வு தான். அந்த சாதாரண அனிச்சை நிகழ்வில் கூட, வாழ்வின் நிலையாமையை ஒரு கணம் விதைத்து, மரணச் சிந்தனையை உள்ளத்தினுள் புகுத்தி, [தவ்ஹீத், ரிஸாலா, ஆகிரத் என்னும் வரிசையில்] தஃவாவின் மூன்றாம் அடிப்படையான ஆகிரத்தைக் கண்முன் நிறுத்திப் பார்க்க நிறைய பக்குவம் வேண்டும். சகோதரி அவர்களுக்குப் பாராட்டுக்கள்.

கண்முன்னே பரந்து விரிந்துக் கிடக்கும் பொட்டல் மயான வெளியில், கோடிகோடியாய் சம்பாதித்து எதையுமே எடுத்துச் செல்லாத மாடமாளிகை சொகுசும், எதுவுமே இல்லையெனினும் இறைத் திருப்தியாய் பொறுமையுடன் வாழ்ந்து மறைந்த மழை ஒழுகும் ஓலைக்குடிசை ஏழ்மையும் ஒன்றாய் அருகருகில் மடிந்துக் கிடக்கும் அந்த நிகழ்வு - நம்மில் அலசிப் பார்ப்பவர்களுக்கு, எஞ்சியிருக்கும் வாழ்வில் மாற்றம் எதுவும் ஏற்படுத்தவில்லை எனில், வாழ்வின் நிலையாமையை உணர்த்தாவிடில், நிலையான மறுமையை நினைவுருத்தாவிடில், இறையச்சத்தின் தரஜா இம்மியளவேனும் உயரா விடில் .... நம் ஈமானில் எங்கோ பிசிறு இருக்கிறது என்பதை மிக எளிதில் உணர இயலும்...

பாங்குக்கும் தொழுகைக்கும் இடையிலுள்ள இவ்வாழ்வை , மண்ணுக்கும் மண்ணுக்கும் இடைப்பட்ட இவ்வாழ்வை இறைத்திருப்தியுடன் வாழ்ந்து, இறுதிச்சொல் கலிமாவுடன் மரணிக்க அல்லாஹ் தஆலா நம் அனைவருக்கும் தவ்பீக் செய்வானாக ஆமீன்.

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
8. Re:...
posted by: S.H.SEYED IBRAHIM (Riyadh. K.S.A.) on 29 March 2016
IP: 78.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 43427

"அஸ்ஸலாமு அலைக்கும்."

மாஷா அல்லாஹ்!!!

உங்கள் கட்டுரை மிஹவும் அழகு கருத்துக்கள் + ஆழமானது. உண்மையில் மட்றட்ட மகிழ்ச்சி!!!

கோடான கோடி வாழ்த்துக்கள்!!!!

தாங்களின் தஹப்பனாருடன் + கணவருடன், (என் மருமகன், மம்மி) மிஹவும் நெருங்கி பழஹி வந்த உறவுஹளை, மீண்டும், மீண்டும் அசை போட வைத்தது. ரெம்பவும் நன்றி ஆய்ஷா முனீர உம்மா!!!

வல்ல அல்லாஹ் உங்களின் வாப்பா மர்ஹூம். என் கண்ணியத்துக்குரிய மிஸ்பாஹி ஆலிம் பெருந்தஹையின் பாவங்களைப் பொறுத்து, மேலான சுவன பதியில் நல்ல இடம் பெற செய்வனஹா ஆமீன்!!!

உங்கள் அனைவர்ஹல்லுக்கும் எனது நற் ஸலாத்தினை மீண்டும் தெரிவிக்கிறேன். "அஸ்ஸலாமு அலைக்கும்."

மிக்க மகிழ்ச்சியுடன் வாழ்த்தும் உள்ளங்கள்,

சூப்பர் இப்ராகிம். எஸ். எச். + குடும்பத்தினர்,

ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இவ்வாக்கம் குறித்த கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved